top of page

Gingelly oil 

  • Writer: Mullai Organic
    Mullai Organic
  • Aug 14, 2019
  • 2 min read

நல்லெண்ணெய்

மரசெக் நல்லெண்ணெய் அனைவருக்கும் வணக்கம் தமிழர்கள் அனைத்திலும் கைதேர்ந்தவர்கள், நம் முன்னோர்கள் முதலில் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றினர், உணவே மருந்தாகவும் வாழ்வியல் முறைகள் இருந்தது, ஆனால் இன்று மருந்து தான் உணவாக உள்ளது அதிகாலை எழுந்ததில் இருந்து உறங்கும் வரை வேஷம் தான் விஷத்தை உண்டு உண்டு பலம் இழந்து சதையாகவே உள்ளனர், நாம் இன்று அதிகம் பயன்படுத்துவது நெய் தாங்க அதாவது எண்ணெய் நம் முன்னோர்கள் இந்த நெய்யே அதன் பயன் அறிந்து பயன்படுத்தினார்கள் உதாரணம், நல்லெண்ணெய் இந்த நல்லெண்ணெய் எள்ளில் இருந்து எடுக்கப்படுகிறது, இது மிகவும் குளிர்ச்சி குடுக்க கூடியது, நாம் உடம்பில் சூடு அதிகமானால் தலையில் தேய்த்து குளித்து வந்தால் சூடு தனியும், அதே நல்லெண்ணெய்ய நம்மோடு தொப்புள்ள விட்டு தேய்த்தால் அது உடம்போட பல இடங்களுக்கு சென்று அதன் பயனே தரும், மனிதனுக்கு வியாதிக்கு அடித்தளமே உஷ்ணம் தான் அது தான் ஆட்டி படைக்கிறது நம்மை நல்லெண்ணெய் தயாரிக்கும் முறை எள்நெயே காலப்போக்கில் மருவி எண்ணெய் என்று அழைக்கப்பட்டது, எள் மற்றும் கருப்பாட்டிய நன்றாக மர்செக்கில் ஆட்டிய கிடைக்கும் நெயே நல்ல ஆரோக்கியத்தை தரும், நாம் கடையில் சென்று நல்லெண்ணெய் என்றும் கேட்டு வாங்கி பயன்படுத்தாமல், ஏதேனும் மில் சென்று அங்கே மரச்செக்கில் எள் அல்லது தேங்காயயை பெரிய கல் உரலில் வாகை மரத்தால் ஆன செக்கை பூட்டி, மாடு கொண்டு சுழற்றி சுழற்றி அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள், மரச்செக்கில் ஆட்டும் எண்ணெய் ஆட்டும் போது சூடேறாது நல்ல வாசனையாகவும் இருக்கும் அதில் சமைத்தால் உணவு ருசியாகவும் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது, மரசெக் எண்ணெய் உயிர்சத்துக்கள் நிறைந்து இருக்கும் நல்ல பழுப்பு நிறத்தில் அடர்த்தியாகவும் இருக்கும் ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும், நல்லெண்ணெய் பயன்கள் நல்லெண்ணெய் வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வருவது ஆயுர்வேத நன்மைகளே தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர் குறிப்பாக பெண்கள் வெள்ளி கிழமையும், ஆணிகள் சனிக்கிழமையும் குளிக்க வேண்டும் என்று ஐதீகமும் இருந்து உள்ளது, மேலும் நல்லெண்ணெயில் பூண்டு, சுக்கு, சீரகம், மிளகு தேய்த்து குளிப்பது பண்டைய மரபாக இருந்துள்ளது, இதனால் பெரும் நன்மைகள் தலைமுடி உதிர்வது இருந்தால் நல்லெண்ணெய் குளியல் முடிக்கு நல்ல ஊட்டம் அளிக்கும், பொடுகு தொல்லை தீரும், அடர்த்தியான முடி வளரும், நிம்மதியான தூக்கம் வரும், கண் எரிச்சல் குறையும், அக்காலத்தில் பெண்கள் தான் இல்லத்தரசிகள் இல்லத்தை ஆளும் அரசி அர்த்தம் தெரிந்து இருக்கும் உங்கள் குடுபம் உங்கள் கையில் உங்கள் குழந்தை கணவர் உங்க எதிர்காலத்தை மனதில் கொண்டு ஆரோக்கியமான உணவுகளை சமைத்து போடுங்க ஒரு ஞானி சொல்லியுள்ளார் மனதை ஒரு இடத்தில் வை உடலை அலைய விடு அதாவது நம்மோட உள்ளம் அங்கே இங்கே என்று அலையாமல் ஒரு இடத்தில் இருக்க வேண்டும், சீரியல் பார்த்துவிட்டு மனதை அலைய விடாதீங்க சீரியல் பார்த்து உடலை ஒரே இடத்தில் வைக்காம வீட்டில் உள்ள சிறு வேலைகள் செய்து உடலை அங்கும் இங்குமாய் சென்று ஆரோக்கியமாக வைக்கவும், இயற்கை நலன் கருதி முல்லை இயற்கை குழு

 
 
 

コメント


©2019 by Mullai Organics. Proudly created with Wix.com

bottom of page