Pungai
- Mullai Organic
- Aug 15, 2019
- 1 min read
புங்க எண்ணெய்

புங்க மரம் இந்த தேசத்தின் ஒரு அங்கம்,
நிலழ்தரும் மரமாகும், இதை புங்க,புங்கன் என்றும் கூறுவார்கள்,
இம்மரத்தை சங்க இலக்கியத்திலும் பாடப்பட்டுள்ளது,
‘’புங்கங்கொம் பங்கொன் பதுபுளியங் கொம்பங்’’,- புங்கமரத்து கிளைகள் ஒன்பதும், புளியங்கிளைகள் ஒன்பது என்றும், 14-ம் நூற்றாண்டு பாடல் கூறுகிறது,
#ஐங்குறுநூறு பாடலில்- ‘’பொரிப்பூம் புங்கின் முறிதிமிர் பொழுதே’’ பொறிபொறியாகப் புங்க பூக்கள் பூத்துகிடக்கின்றன, என்றும் அவைகள் குளிர்ச்சியே தரும் என்றும் பாடியுள்ளனர்,
நாம் எவ்வளவு சூட்டில் நீண்டாலோ நடந்தோ வந்து புங்க மரத்தின் நிலழில் நிண்டால் அதன் பயனே அறிய முடியும், தேனை அருந்தாமல் அதன் ருசி அறிய முடியாது அதை போலத் தான் புங்கை மரத்தின் அருமையும் புங்க மரம் வறட்சி காலத்திலும் தாங்கி நிற்க்ககூடியது, மண் வளத்தையும் பெருக்கும் புங்க மரம்,
சமையலுக்கு நெருப்பிற்க்காகவும் பயன்படுத்தயுள்ளனர் முன்னோர்கள்,
புங்கை மரம் இலை முதல் வேர் வரை வைத்தியகுணமுள்ளது,
#புங்கையின் பயன்கள் ;-
புங்க மரத்தின் இலை,காய்,பட்டை,விதை,வேர்,பூ,என அனைத்துமே மருத்துவகுணமுடையது,
புங்க மரத்தின் நீரை அருந்துஙதினால் நீரிளிவு நோய்,சுவாச நோய்,இருமல் போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும்,
இப்புங்க குச்சியே பல் துவக்கவும் பயன்படுத்தலாம்,வேம்புக்கு இணையான மருத்துவக்குணம் உள்ளது,
இலையின் பயன்கள் புங்க இலைக்கு வயிற்று புண்ணை குணமாக்கும் பண்பு உள்ளது,
புங்க இலையே இடுத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் வயிற்று புண் குணமாகும்.
விளக்கெண்ணேயில் புங்கை இலையே பொடியே காய்ச்சி, தெங்காய் எண்ணேயில் குழைத்து தடவி வந்தால் வெட்டு காயம் புண்கள் குணமாகும், அத்துடன் புங்கை இலையே விளக்கெண்ணையில் வதக்கி கட்டிகளில் தடவினால் வீக்கம் குறையும்,
புங்க மரப்பட்டையே இடித்து பொடியாக்கி நீரீல் காய்ச்சி அருந்திவந்தால் மூலநோய் தீரும் என்பார்கள்,
புங்க வேர்,மிளகு,திப்பிலி,சீந்தில் இலை,மகிழ்வேர் இவற்றை கற்றாலைசாறில் அரைத்து சிறு உருண்டையாக பிடித்து உட்க்கொண்டாள் எலிகடி விசத்தை முரிக்கும்.
புங்க மரத்தின் கழிவுகள் வேளாண்மைக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
புங்க எண்ணெய் எரிபொருளாகவும் பல மருத்துவத்திற்க்கும் பெரிதும் பயன்படும்,
புங்க மரத்தின் பயன்களை தேடி முல்லை இயற்கை குழு
தொடரும்,,,,,,,,,
Comments