top of page

கஸ்தூரி மஞ்சள் 

  • Writer: Mullai Organic
    Mullai Organic
  • Aug 14, 2019
  • 3 min read

KASTHOORI MANJAL (கஸ்தூரி மஞ்சள் )

கஸ்தூரி மஞ்சள் மலர்

மிகவும் மருத்துவகுணம் நிறைந்தது இது சர்மத்திற்கு பளபளப்பு தன்மை தரக்கூடியது,

கஸ்தூரி மஞ்சள் நல்ல நர்மணம் தரக்கூடியது

கஸ்தூரி மஞ்சள் கிழங்கை உலர்த்தி பொடி செய்து நாம் பயன் படுத்திக்கொலாலாம்,

பயன்கள்:

மூட்டு வலியை குணப்படுத்த கூடியதும், வயிற்று புண்களை ஆற்றவல்லதும், தலைபாரத்தை சரிசெய்யும் தன்மை உடையதுமான கஸ்தூரி மஞ்சளின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். கஸ்தூரி மஞ்சள் நுண்கிருமிகளை அழிக்க கூடியது.

மணம் தரவல்லது

உள் உறுப்புகளை தூண்டும். உடலுக்கு பலம் தரும். தோல்நோய்களை போக்கும். உடலில் தேவையற்ற முடிவளர்வதை தடுக்கிறது. நுரையீரல் நோய்களை குணப்படுத்துகிறது.கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி குடல் புண்களை ஆற்றும், வயிற்றுப்போக்கை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள், தயிர். செய்முறை: 2 ஸ்பூன் தயிர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர அல்சர் குணமாகும். அமிலத் தன்மையினால் குடலில் ஏற்படும் அரிப்புகளை சரிசெய்யும். ரத்தத்தை சுத்தப்படுத்தி குடலில் சேர்ந்த கிருமிகளை வெளித்தள்ளும். வெள்ளைபோக்குக்கு மருந்தாகிறது. ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. நச்சுக்கள் உடலில் சேராத வண்ணம் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. கஸ்தூரி மஞ்சளை கொண்டு நீர்க்கோவை, தலைபாரத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள், சுண்ணாம்பு. செய்முறை: சிறிது கஸ்தூரி மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு, சிறிது சுண்ணாம்பு சேர்க்கவும். இந்த கலவையை கலந்து நெற்றியில் பற்றாக போடும்போது தலைபாரம், நீர்க்கோவை சரியாகும். சுண்ணாம்பு அதிகம் சேர்த்தால் தோலில் எரிச்சல் ஏற்படும். எனவே குறைவாக சேர்க்கவும். கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி தசைவலி, மூட்டுவலிக்கான மேல்பற்று மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய், கஸ்தூரி மஞ்சள். செய்முறை: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் விட்டு சூடு செய்யவும். இதில், கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து கலக்கவும். இதை மேல்பற்றாக பூசிவர தசை வலி, மூட்டுவலி, வீக்கம் சரியாகும். இது, வலி நிவாரணியாக விளங்குகிறது. அடிபட்ட வீக்கம் சரியாகும்.கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி முகப்பூச்சு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு பொடி, ரோஜா இதழ்கள், பால். செய்முறை: கஸ்தூரி மஞ்சள் பொடியுடன் கோரைக்கிழங்கு பொடி, அரைத்து வைத்திருக்கும் ரோஜாப்பூ இதழ்கள், சிறிது பால் விடவும். இதை நன்றாக கலந்து வாரம் ஒருமுறை முகப்பூச்சாக பயன்படுத்தி வர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். பருக்கள், சுருக்கங்கள், வறண்ட சருமம் மாறும். முகம் பொலிவு பெறும். முகத்தில் முடி வளராமல் தடுக்கிறது. வாயில் ஏற்படும் புண்களை ஆற்றும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: அகத்திக்கீரை, நல்லெண்ணெய். செய்முறை: அகத்திக்கீரையை நசுக்கி நல்லெண்ணெய்யில் இட்டு காய்ச்சி எடுக்கவும். இதிலிருந்து ஒரு ஸ்பூன் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வயிறு, வாய்ப்புண் சரியாகும். வயிற்றில் புண் இருக்கும்போதுதான் வாயில் புண் ஏற்படும். இதற்கு அகத்திக்கீரை அற்புத மருந்தாகிறது. கஸ்தூரி மஞ்சள் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்றுவலி தீரும். பாலில் கலந்து குடிக்க, ‘பிராங்கைட்டிஸ்’ என்னும் நுரையீரல் தொற்று மற்றும் இருமலை குணப்படுத்தும். பசியை உண்டாக்கும். கஸ்தூரி மஞ்சள் பொடியை வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய, சில நிமிடங்களில் தலைவலி பறந்துபோகும். மஞ்சளில் இரு வகைகளில் ஒன்றை சமையலுக்கு பயன்படுத்துவோம், மற்றொன்று முகத்தில் பூசுவதற்கான மஞ்சள் ஆகும். சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி விடும். உடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால் குணமாகி விடும். மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளில் தடவினால் மறைந்துவிடும். கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும். மஞ்சள்தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண் ஆறும். சளி பிரச்சனையும் சரியாகும். பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக இது உதவுகிறது. முகத்தோல் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும். வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம். கஸ்தூரி மஞ்சளை சென்சிடிவ் சாரும் உள்ளவர்கள் வெறும் மஞ்சள் பூசாமல் அத்துடன் பால் தயிர் கலந்து பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும், எண்ணெய் வடு உள்ளவர்கள் கஸ்தூரி மஞ்சளுடன் பன்னீர் கலந்து தடவி வந்தால் நல்லது, கஸ்தூரி மஞ்சள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முகத்தில் கருப்புள்ளிகள் மறையும், பருக்கள் வராது, தொடர்ந்து செய்தால் முகசுருக்கம் நீங்கும், கஸ்தூரி மஞ்சளையும் பயித்தமாவு, தயிர் மூன்றும் கலந்து முகத்தில் தேய்த்து 30 நிமிடம் பிறகு கழுவி வந்தால் முகம் பளளப்பாகும், முகத்தில், இயற்கை அழகு பேண, கஸ்தூரிமஞ்சள், கடலை மாவு, பச்சைப்பயறு மாவு, பாலாடை நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்யலாம். அல்லது வாரம் 4 முறை செய்யலாம். இயற்கை நேசிக்கும் முல்லை இயற்கை குழு

 
 
 

Recent Posts

See All

Yorumlar


©2019 by Mullai Organics. Proudly created with Wix.com

bottom of page